search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூதப்பாடி விற்பனை கூடம்"

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பூதப்பாடி விற்பனை கூடத்தில் ரூ.2 கோடி பருத்தி தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு பருத்தி விற்பனை அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது இதனால் பருத்திக்கு புகழ் பெற்று வருகிறது விற்பனை கூட்டம்.

    இந்த வருட பருத்தி ஏலம் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்தியா முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் செய்வருவதால் சந்தையில் உள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகிறது.

    நேற்று விற்பனை கூடத்தில் நடைபெற இருந்த பருத்தி ஏலம் நடைபெறவில்லை.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது கடந்த 10 நாட்களாக மிகவும் சிரமமப்பட்டு பருத்தி எடுத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம் சுமார் 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    சுமார் 2 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்படும் இந்நிலையில் லாரி ஸ்டிரைக் கால் இந்த வார விற்பனை நிறுத்தப்பட்டது வாரா வாரம் விற்பனையை வைத்துதான் விவசாய கடன் மற்றும் ஆட்கள் கூலி ஆகியவற்றை கொடுத்து வந்தோம் இந்தவாரம் என்ன செய்வது என்றும் அரசு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தி லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறினர்.



    ×